Thursday, January 26, 2017

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 29.01.2017



*பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு  29.01.2017*


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


*முன்னுரை*

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! உங்கள் அனைவரையும் ஞாயிறுத் திருவழிப்பாட்டின் நாயகனாம் இறைஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள். 
இன்றைய வழிபாடானது ஏழ்ழை வாழ்வும், எளிய மக்களின் குறைகளையும், வென்றெடுக்க, இறைவாக்கினர் செப்பனியா வழியாக யாவே கடவுள் அவரின் கட்டளைக் கடைபிடிக்கவும், நேர்மையையும், நீதியையும் நாம் வாழும் சமூகத்தில் நிலை நாட்டவும் தீமையை அறவே விட்டுவிட அழைப்பு விடுக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் திருத்தூதர் பவுலின் வழியாகக் கடவுள் எதற்காக நம்மை இவ்வுலக வாழ்விற்கு அழைத்திருக்கின்றார்? அந்த அழைப்பினை நாம் உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? கடவுள் திருமுன் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்முடைய ஞானமெல்லாம் கிறிஸ்துவினிடமிருந்தே வருகின்றது.
ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்ட கிறிஸ்து மலைமீது அமர்ந்து, ஏழைகள் இவ்வலகில் வாழச் இச்சமூகத்தில் தகுதி இல்லாதவர்கள் எனக் கருதபட்ட, அனைவரும் கடவுளின் பார்வையில் தகுதியுடையவர்களாகவும், பாராட்டுக்குறியவர்களாகவும் நற்சான்றுப் பெற்றவர்கள் என ஆறுதல் கூறும் அனைத்து வழிபாட்டு வாசகங்களும், இறைவன் தரும் இம்மாபெரும் விருந்திற்கு அழைக்கின்றார். அழைப்பின் குரலுக்குச் செவிச் சாய்த்துப் பங்கேற்போம் திருப்பலியில் , வார்த்தைகளால் அல்ல! வாழ்வாகத் தொடர்வோம். வாரீர்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இறைவாக்கினர் செப்பானியா எசாயாவிற்கு முன் வாழ்ந்தவர். இவருடைய காலத்தில் ஏழைகள் சமுதாயத்தில் அடிமைகளாக்கப்பட்டு அவதிக்குள்ளானர்கள். இத்தகைய சுழலில் செப்பானியா இறைவாக்கினர் எழைகளை நோக்கி விடுத்த அறைகூவல் தான் இன்றைய முதல் வாசகம். ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிக்க நேர்மையை நாட, மனத்தாழ்ச்சியோடு ஆண்டவரைத் தேட அழைக்கின்றார். மேலும் ஆண்டவரின் அழிவின் நாளில் ஏழைகளுக்கு அழிவு நேராது என்றும் ஆறுதல் சொல்லும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


யூதமக்கள் கிறிஸ்துவின் சிலுவை மீட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சிலுவை அவமானத்தின் சின்னம். ஆனால் அதன் மூலமாக வெற்றிக் கொண்டார். கிரேக்கர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உயிர்ப்பின் மூலம் மீட்பை தந்தார். நம்மை மீட்க மடமை என்று கருதியதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இறைமகன் தாழ்ச்சி கொண்டார். உலக ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமையைப் பாராட்டாமல் மனத்தாழ்ச்சி கொண்ட இயேசுவின் பெருமைப் பாராட்ட அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.


*பதிலுரைப்பாடல்*

திருப்பாடல்: 146:7-10

பல்லவி : ஏழையரின் உள்ளத்தோர் பெறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

 

*மன்றாட்டுகள்*

1. எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர் எனெனில் விணிணரசு அவர்களது என்று மொழிந்த எம் இறைவா! எம் திருஅவையின் அனைத்தும் வெறும் நிறுவனங்களாக அல்லாமல் உம் அன்புப் பணியினை அகில உலகின் எல்லா மாந்தர்க்கும், வேறுபாடின்றிப் பணியாற்றிடவும், துணைபுரியும் உதவிக்கரமாக நின்று செயல்படத் தேவையான எளிய மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

.2. துயருறுவோர் பேருபெற்றோர் என்று கூறிய எம் இறைவா! இன்று அகில உலகில்  வல்லரசு நாடுகள் தங்கள் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தை ஏழைநாடுகள்,  வளரும் நாடுகள் மீது தங்கள் ஆதிக்கத்தை அதிகாரத்தைச் செலுத்தாமல் அவர்களின் எல்லா நல்ல திட்டங்களிலும், முன்னேற்றங்களிலும் துணையாளராக இருந்து அவர்களின் நல்வாழ்வுச் சிறந்து விளங்கிட உம் வார்த்தையை வாழ்வாக்கிடத் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுடையோர் பேறுபெற்றோர் என்று கூறிய எம் இறைவா! இன்றைய சூழலில் இரக்கம் நிறைந்த செயல்கள் குறைந்து,  இரக்கமற்ற செயல்கள் அதிகரிக்கும் இவ்வேளையில் சிசுக் கொலைகள், வரதட்சனைக் கொடுமை, குழந்தையின்மையினால் திருமணஉறவுகள் பிரிந்து, ஆதரவற்றவர்களாய் வாழ்பவர்களுக்கு ஆறுதல் அளித்து உம்இரக்கப் பெருக்கை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நீதிநிலை வேட்கைக் கொண்டோர் பேறுபெற்றோர் என்று உரைத்த எம் இறைவா! இன்று எம் தமிழகத்தில் நீதிக்கான பேராட்டங்கள் இல்லாமல் போய்விடும் என்ற சூழ்நிலை மாறி உலகம் வியந்துப் பார்க்கக்கூடிய அளவில் எம் இளைய சமுதாயம் அமைதி வழியில், உண்மை வழியில் அனைத்து மத்ததினரும், தோழமை உணர்வோடு ஒன்றிணைந்துத் தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாத்திட, தியாகம் செய்த அனைத்து உடன்பிறவாச் சகோதரச் சகோதரிகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி,  நீர் கொண்டு வந்த உண்மையான நீதியை நிலைநிற்கச் செய்யத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இக்காலச்சூழலில் இரக்கம், தூய்மை உள்ளம் படைத்தோர், நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர், இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத் துன்புறுத்தப்படும் போது உமது இரக்கப்பார்வை அவர்கள் மீது பொழியட்டும். அடிமைதனத்திலிருந்து அன்று எம் முன்னோரை மீட்டவரே இன்று உம்மை மட்டுமே நம்பி வாழும் அனைத்து மக்களையும்,  இடிந்துபோன எம் வாழ்வை உமது பேராற்றால் வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கத்தை எம் மீது பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

ww.anbinmadal.org

Wednesday, January 18, 2017

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 22.01.2017



பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு  22.01.2017



இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-


எசாயா 9:1-41
கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23


முன்னுரை:-


பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இறைசாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பணிக்காக அழைக்கப்படுகிறோம். இயேசு தனது விருப்பங்களை இந்த மண்ணுலகில் மனித உறவுகளில் நிறைவுக் காணத் தனது சீடர்களை அழைக்கின்றார். மனமாற்றத்தைக் காணத்தான் இயேசு அழைக்கின்றார். உண்மை அழைத்தல் என்பது வெளிக்குறத் தோற்றத்தை வைத்துத் தீர்மானிப்பது அல்ல. மாறாக அடிப்படையில் மனநிலை மாற்றம் காண்பதோயகும்.இதனையே இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை மாற மனமாற்றம் முதலில் தேவை என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்.
அன்புள்ளம் கொண்டு நம்மைக் கரம் பிடித்து அழைத்த இயேசு கிறிஸ்து நம்முடன் கடைசி வரை இருக்கின்றார். இறைவனில் அழைத்தல் இல்லறமோ துறவறமோ எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்து நின்று வாழத் தேவையான வரங்களை இத்திருப்பலி வழியாக இறைவனிடம் மன்றாடுவோம். வாரீர்!

  வாசகமுன்னுரை:-



முதல் வாசக முன்னுரை:-


செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் பாழ்படுத்தப்பட்டதன் விளைவாக அம் மக்கள் அடிமைகளாய் முகவரி இல்லா மக்களாய் வாழ்ந்தபோது இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் அவர்களின் சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றினார். இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் பேரொளியை உதிக்கச் செயதார். மக்கள் அக்களிப்பதுபோல் களிகூர்ந்தனர் என்று இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை:-

கொரிந்து நகர் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளால் யார் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்களும் தன்னலம் மிகுந்தபோக்கும் நிறைந்துபோனது. இவ்வாறு ஏற்றப்ட்டப் பிரிவினையால் வருந்தியத் திருத்தூதர் பவுல் நம் அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். எனவே நமக்குள் பிரிவினைப் பேதங்கள் இருக்க்கூடாது என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து மனமாற்றம்பெற முயற்சிப்போம்.




பதிலுரைப்பாடல்:-



பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.

திருப்பாடல்: 27: 1,4, 13-14

ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்சவேண்டும்?ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதிகொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி 


மன்றாட்டுகள்:-


1.  அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ, ஆதிதிருச்சபை கொண்டு வந்த அர்த்தமுள்ள, கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா! இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மை அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதியச் சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், விவசாயிகளின் தற்கொலைகள், நீரின்றி வறட்சியால் வாடும் அனைத்து நிலங்களும் உம் அருள் பொழிவதால் நல்ல மழையை அருளி வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற முன்னோர்களின் வாக்கிற்கு இணங்க உம் இரக்கத்தை இக்காலச்சூழலில் ஏழைகள் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

                                           www.anbinmadal.org

Wednesday, January 11, 2017

பொதுக்காலம்இரண்டாம் ஞாயிறு 15.01.2017



*பொதுக்காலம்இரண்டாம் ஞாயிறு  15.01.2017*





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*





*முன்னுரை*



இன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கடவுளின் ஆட்டுடிக்குட்டி என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை நானும் கண்டேன் என்று பதிவுச் செய்கிறார்.

இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.

பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்!



 *வாசகமுன்னுரை*




*முதல் வாசக முன்னுரை*


யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும், இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்’ (எசா 49:6) என ஒவ்வொருவரும் பணிபுரிய அழைக்கப்படுகிறோம் என இறைவாக்கினர் எசாயா, இன்றயை முதல் வாசகத்தின் மூலம் அறைகூவல் விடுக்கின்றதைக் கவனமுடன் கேட்ப்போம்.



*இரண்டாம் வாசக முன்னுரை*


கொரிந்து திருச்சபை நேர்மறையான புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக்கேடானவர்களுக்கும், பிரிவினைச் சிந்தனை உள்ளவர்களும், நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராக சண்டையிட்டுக்கொண்ட மனிதர் களும் அடங்கிய திருச்சபை. இருப்பினும் புனித பவுல் அவர்களைத் "தூயவர்கள்என்று அழைக்கிறார். அதாவது நாம் எவ்வளவுதான் தீமைகளிலும், பாவத்திலும் வாழ்ந்தாலும் இறைவனது பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் இருப்பதையே சுட்டிக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்..


பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல்
40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9 



நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி


 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.  எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி


என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;  என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;  உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி


என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி



*மன்றாட்டுகள்*




1.  சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா! உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம் மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகம் மாந்தர்கள் அனைவரும் தம் அழைப்பை ஏற்று இயேசுவின் சீடர்களாய் அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



2. உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம் குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



3. எம் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமுமான எம் இறைவா! இந்த விழாக்காலங்களில் இயற்கையின் ஏமாற்றத்தால் நொந்து நூலாகிப்போன எம் விவசாயத் தொழிளாலர்களைக் கண்ணேக்கிப்பாரும். அவலங்கள் நீங்கி வளமைப் பெற்ற அவர்களின் வாழவாதரங்கள் மாறிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



4. உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா! உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



5. எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா! எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 www.anbinmadal.org






Tuesday, January 3, 2017

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா -08/01/2017



*ஆண்டவரின்  திருக்காட்சி - பெருவிழா*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

1.ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12

*திருப்பலி முன்னுரை *


இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!
நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர்.
பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எ
ந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்கவேண்டும்” என்கிறார்.
அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப்போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...

*வாசக முன்னுரை*



*முதல் வாசகம்*

இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின் போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். கடவுளின் மாட்சிமை ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் அந்த ஒளியைத் தேடிவருவார்கள். செல்வங்கள் தேடிவரும். மக்கள் பொன், நறுமணப் பொருள் ஏந்தி வருவதைக் கண்டு எருசலேம் நகர் அகமகிழ்ந்திடும். அவர்கள் கடவுளைப் புகழ் பாடுவார்கள் என்று முன்னுரைத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசகம்*

 திருத்தூதர் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளைப் பற்றி எடுத்துரைக்கின்றார். நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்று இயம்பும் இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப்பாடல்*


பல்லவி: ஆணடவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.


கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  பல்லவி.

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.  பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  பல்லவி

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.  பல்லவி

*மன்றாட்டுகள்*


1.எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா! உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா! நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள்  உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.எமைப் படைத்து ஆளும் எம் தலைவா! நாட்டில் எங்கு நோக்கினும் பொருளாதார மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் உம் மக்களைச் சிதறடிக்கும் நிலையை நீவீர் நன்கு அறிவீர். இந்தப் போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துப் பொதுநலம் காத்திடவும், வறட்சியால் நாள்தோறும் அவதிக்குள்ளாகிய விவசாயப் பெருமக்களுக்கு வேண்டிய உதவிகள் விரைவில் அவர்களுக்கு முழுமையாகச் சென்று அடையவும், அவர்களின் அகால மரணங்கள் தடுக்கப்படவும், மீண்டும் அவர்கள் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்பிட உம் வரங்களை  அருள்மாரிப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.எமைப் படைத்து ஆளும்
எம்  இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.