Friday, July 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 12-07-2015

ஆண்டின் 15 ஞாயிறு



 இன்றைய நற்செய்தி:


திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவில் நாமத்தில் அனைவருக்கும் ஆன்பு வாழ்த்துக்கள்!
இன்று நாம் ஆண்டின் 15ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். . இங்கே கிறிஸ்துவின் மறையுடலில் சங்கமான நம்அனைவரையும் இறைவன் தம் அன்புத்திட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறார். எவ்வாறு இயேசு தம் சீடர்களை மறைபணிக்குஅனுப்பினாரோ அவ்வாறே நம்மையும் பணிக்கிறார்.

புனித சவேரியரும், குழந்தை தெரசம்மாளும் மறைபரப்பு நாடாகிய  இந்தியாவின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். ஒருவர் நடைபயணமாகச் சென்று இறையரசைப் பரப்பினார். மற்றவரோ அறைக்குள் இருந்தவாறே தன் செபத்தின் மூலம் அதே பணியைச் செய்தார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் இவற்றையே நமக்கு உணர்த்துகின்றன.  அனைவருக்கும் இறைபணி உண்டு. அதை நிறைவேற்ற வேண்டிய ஞானத்தை இறைவனிடம் பெற்றிட இன்றைய திருப்பலிக்கு குருவுடன் இணைந்து பங்கேற்போம். வாரீர்
இறைகுலமே!


வாசக முன்னுரை:



முதல் வாசகத்தில்  தகுதியற்றவர் இறைஅழைப்பை
ஏற்றக்கொண்டபின்  அவருக்கு கிடைக்கும் ஞானத்தையும்
ஆற்றலையும் துணிவையும் இறைவன் அவர்களுக்கு அளித்து 
பணிவாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், ஆடுமேய்ப்பவனையும் 
இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினராக மாற்றிய அற்புதத்தையும்
ஆமாஸ் இறைவாக்கினர் நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் இயேசு தம் சீடர்களை தேர்ந்தெடுக்கும்
போது பாமரமக்களையே அழைத்தார். அவர்கள் கிறிஸ்துவுடன்
இணைந்தபின் ஆற்றலும் திறைமையும் உடையவர்களாக
மாறினார்கள். நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன்
விளங்கும்படி உலகம் தோன்றும் முன்னே கடவுள் நம்மைக் கிறிஸ்து
வழியாகத் தேர்ந்தெடுத்தார். இவ்வார்த்தைகளே மனதில் இருத்திபடி 
புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.



விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:

பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென்அமெரிக்கா நாடுகளின்
பயணம் வெற்றி பெறவும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள்,
இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும்
மறைபரப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றலும், திறமைகளும்
நிறைந்தவர்களாக மாற போதுமான வல்லமை இவர்களுக்கு
பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி
இறைவா உமை மன்றாடுகிறோம்.


நாட்டிற்காக:

உலக நாடுகளின் இராஜாதி ராஜனே! எமது நாட்டு அரசியல்
தலைவர்கள் ஊழலை ஓழிப்பபதாகக் கூறி வந்தவர்கள் அனைவரும்
ஊழலில் மூழ்கி மக்களை மறந்து தங்களைப் பற்றியே  நினைக்கும்
நிலை மாறி புதிய சமுதாயத்தை எம் நாட்டில் உருவாக்கிடவும்,
அண்டை நாடுகளுடன் அமைதி நிலையினை ஏற்ப்படுத்தவும்,
மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திடவும் அவர்களுக்கு நல் மனம்
தந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.



மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:



எமக்கு புத்துயிர் அளிக்கும் எம் அன்பு நேசரே! இறைவா! உமது
நற்செய்தியின்படி இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப
மனமாற்றத்தை ஏற்ப்படுத்த எங்களை உம் அன்பு சீடர்களாய்
இவ்வுலகில் அனுப்பும். அதையே உம் அன்பு கட்டளையபாக ஏற்று
அதன்படி இன்றைய  சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை
மன்றாடுகிறோம்.

 

இளைய சமுதாயத்திற்காக :

 

கரிசனை அன்பு கொண்ட  எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து
ஒளிவிசிட மது என்னும் தடை தமிழகம் எங்கும் நிறைந்து
சிறுகுழந்தைகள் தொடங்கி சமுதாயத்தின் அனைத்து மக்களை
ஆட்டிப்படைக்கும் வேளையில் தங்கள் வாழ்க்கையில்  நிலை
தடுமாறும் நிலை உள்ள இன்றைய இளைய சமுதாயம்
காப்பாற்றப்படவும், அவர்கள் உமது நேரிய இறையரசு பாதையில்
பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment