ஆண்டின் 16ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
1. எரேமியா 4:42-442.
2. எபேசியர் 2:13-143.
3. மாற்கு 6:30-34
முன்னுரை:
இறைஇயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். பரிவுள்ள இறைவனை அறிந்துக் கொள்வோம். இயேசு தன்னை பின் தொடரும் மக்களை கண்டு ஆயரில்லா ஆடுகளை போல அலைமோதும் அவர்கள் மீது பரிவுக் கொண்டார். இரக்கம் என்பது பரிதாபத்தை காட்டும். ஆனால் பரிவு என்பது அந்த பரிதாபத்தை செயல்பாட்டில் காட்ட நம்மை இட்டுச்செல்லும்.....
ஆம் அன்பர்களே! இறைமகன் மண்ணகத்திற்கு வந்தபோது ஏற்றத்தாழ்வுகளும், பிளவுகளும் மேலேங்கி மனித குலத்தை பிளவுபடுத்தியிருந்ததால் அவர் நம்மீது பரிவு கொண்டு மனிதகுலத்தை ஒன்றுபடுத்தி தம் சீடர்கள்களாக வாழ அழைக்கின்றார். பணம் இருந்தால் மனமில்லை. மனமிருந்தால் பணமில்லை. எனவே சுயநலப் போக்கிலிருந்து விடுபட்டுப் பரிவும் பாசமும் நிறைந்த இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ திருச்சபை நம் எல்லோரையும் அழைக்கிறது. இதனை ஏற்று இயேசுவின் சீடர்களாய் மாற இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாருங்கள் இறைமக்களே!
வாசகமுன்னுரை:
முதல் வாசகத்தில் இறைவனின் ஆட்டுமந்தைகள் தீய ஆயர்களால் சிதறடிக்கப்பட்டன. எனவே வருத்தமுற்ற யாவேகடவுள் தாமே முன்னின்று தம் மந்தைகளிலுள்ள எஞ்சிய ஆடுகளை ஒன்று கூட்டி அவற்றைப் பலுகிப்பெறுகி, அவைகளுக்கு ஒரு ஞானமுள்ள ஆயனை நியமிக்கப் போவதாகவும், அவைகள் பாதுகாப்புடன் வாழும் என்று உறுதிமொழி அளிப்பதை எரேமியா நூலிருந்து வாசிக்கக் கேட்போம்.
இரண்டாம் வாசகத்தில் தொலைவிலிருந்து அவரை கண்டு உணர்ந்த மக்கள் எல்லாம் இப்போது அவரின் இரத்ததால் ஒருங்கிணப் பட்டுள்ளார்கள். பல்வேறு இனங்களாக இருந்தவர்கள் ஒரினமாய் மாற்றிவிட்டார்கள். பிரிவினைகள் களையப்பட்டு சிலுவை வழியாக அனைவரும் ஒருடலாக்கினார் இறைமகன் இயேசு. அவர் வழியாக தூயஆவி மூலமாக தந்தையிடன் அணுக எபேசியர் திருமுகத்தின் வழியாக பவுலடிகளார் அழைக்கிறார். கவனமுடன் கேட்போம்.
மன்றாட்டுகள்:
1. உம் அன்பு பாராமரிப்பு ஏங்கும் மந்தைக்காக:
பரிவுள்ளம் கொண்ட எம் இறைவா!ஆயரில்லாத மந்தையாக பரிதவிக்கும் உம் மக்களைப் பாரும். அவைகள் சிதறடிக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படாமல் உமது அரவணைப்பில் பேணிக்காக்கும் ஞானமுள்ள ஆயர்களை நீதியுள்ள தளிர்களாய் எமக்கு அளிக்குமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இறைவா..
2. பிளவுப்பட்டு துன்பப்படும் உம் இனத்திற்காக:
சிலுவையில் உம் இரத்ததால் தூரத்தலிருந்து உணர்ந்திருந்த மக்களை ஒன்றிணைத்த இறைமகனே! பிளவுப்பட்டு சிதறியடிக்கப்பட்ட உம் மக்களே கண்ணேக்கியருளும். பகைமையை மறந்து அனைவரும் உம்மால் இணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து பிறர்நலம் காணும் மனித குலமாய் மாறி தூயஆவியின் வழியாக தந்தையாம் இறைவனை அடைய உம்மை மன்றாடுகிறோம் எம் அன்பு தலைவா..
3. எம் நாட்டிற்காக:
ஒன்றிணைக்கும் எம் உன்னத இறைவா, எம் நாட்டிற்காகவும், எங்கள் தலைவர்களுக்காகவும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து உம்மிடம் வருகிறோம். அவர்களும் பரிவிரக்கம் கொண்ட உம் முன்மாதிரியை கண்டு உணர்ந்து எம் நாட்டு மக்களுக்கும் உலகமக்களுக்கும் சுயநலமற்ற சேவைகளை செய்ய நல்ல இதயத்தையும் எண்ணங்களையும் அருளுமாறு மன்றாடிக் கேட்கிறோம் எம் இதய அரசரே.
4. எம் திருச்சபை வழிநடத்தும் அனைவருக்காக:
கரிசனை அன்புடன் எம்மை பேணிக்காக்கும் எங்கள் நல்லாயனே! நீர் தேர்ந்து கொண்ட இத்திருக்கூட்டத்தை வழிநடத்த எமக்கு தந்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் அனைவரும் நீர் விரும்பும் இறையரசை இவ்வுலகில் அறிவிக்க, அவர்களை தூயஆவியாரின் மூலம் வழி நடத்த உம்மை மன்றாடுகிறோம்.
பரிவுள்ளம் கொண்ட எம் இறைவா!ஆயரில்லாத மந்தையாக பரிதவிக்கும் உம் மக்களைப் பாரும். அவைகள் சிதறடிக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படாமல் உமது அரவணைப்பில் பேணிக்காக்கும் ஞானமுள்ள ஆயர்களை நீதியுள்ள தளிர்களாய் எமக்கு அளிக்குமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இறைவா..
2. பிளவுப்பட்டு துன்பப்படும் உம் இனத்திற்காக:
சிலுவையில் உம் இரத்ததால் தூரத்தலிருந்து உணர்ந்திருந்த மக்களை ஒன்றிணைத்த இறைமகனே! பிளவுப்பட்டு சிதறியடிக்கப்பட்ட உம் மக்களே கண்ணேக்கியருளும். பகைமையை மறந்து அனைவரும் உம்மால் இணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து பிறர்நலம் காணும் மனித குலமாய் மாறி தூயஆவியின் வழியாக தந்தையாம் இறைவனை அடைய உம்மை மன்றாடுகிறோம் எம் அன்பு தலைவா..
3. எம் நாட்டிற்காக:
ஒன்றிணைக்கும் எம் உன்னத இறைவா, எம் நாட்டிற்காகவும், எங்கள் தலைவர்களுக்காகவும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து உம்மிடம் வருகிறோம். அவர்களும் பரிவிரக்கம் கொண்ட உம் முன்மாதிரியை கண்டு உணர்ந்து எம் நாட்டு மக்களுக்கும் உலகமக்களுக்கும் சுயநலமற்ற சேவைகளை செய்ய நல்ல இதயத்தையும் எண்ணங்களையும் அருளுமாறு மன்றாடிக் கேட்கிறோம் எம் இதய அரசரே.
4. எம் திருச்சபை வழிநடத்தும் அனைவருக்காக:
கரிசனை அன்புடன் எம்மை பேணிக்காக்கும் எங்கள் நல்லாயனே! நீர் தேர்ந்து கொண்ட இத்திருக்கூட்டத்தை வழிநடத்த எமக்கு தந்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் அனைவரும் நீர் விரும்பும் இறையரசை இவ்வுலகில் அறிவிக்க, அவர்களை தூயஆவியாரின் மூலம் வழி நடத்த உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment