*பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 29.01.2017*
*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*
*முன்னுரை*
இறைஇயேசுவில்
பிரியமானவர்களே! உங்கள் அனைவரையும் ஞாயிறுத் திருவழிப்பாட்டின் நாயகனாம் இறைஇயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்.
இன்றைய வழிபாடானது ஏழ்ழை வாழ்வும், எளிய மக்களின் குறைகளையும், வென்றெடுக்க, இறைவாக்கினர் செப்பனியா வழியாக யாவே கடவுள் அவரின் கட்டளைக் கடைபிடிக்கவும், நேர்மையையும், நீதியையும் நாம் வாழும் சமூகத்தில் நிலை நாட்டவும் தீமையை அறவே விட்டுவிட அழைப்பு விடுக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் திருத்தூதர் பவுலின் வழியாகக் கடவுள் எதற்காக நம்மை இவ்வுலக வாழ்விற்கு அழைத்திருக்கின்றார்? அந்த அழைப்பினை நாம் உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? கடவுள் திருமுன் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்முடைய ஞானமெல்லாம் கிறிஸ்துவினிடமிருந்தே வருகின்றது.
ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்ட கிறிஸ்து மலைமீது அமர்ந்து, ஏழைகள் இவ்வலகில் வாழச் இச்சமூகத்தில் தகுதி இல்லாதவர்கள் எனக் கருதபட்ட, அனைவரும் கடவுளின் பார்வையில் தகுதியுடையவர்களாகவும், பாராட்டுக்குறியவர்களாகவும் நற்சான்றுப் பெற்றவர்கள் என ஆறுதல் கூறும் அனைத்து வழிபாட்டு வாசகங்களும், இறைவன் தரும் இம்மாபெரும் விருந்திற்கு அழைக்கின்றார். அழைப்பின் குரலுக்குச் செவிச் சாய்த்துப் பங்கேற்போம் திருப்பலியில் , வார்த்தைகளால் அல்ல! வாழ்வாகத் தொடர்வோம். வாரீர்.
இன்றைய வழிபாடானது ஏழ்ழை வாழ்வும், எளிய மக்களின் குறைகளையும், வென்றெடுக்க, இறைவாக்கினர் செப்பனியா வழியாக யாவே கடவுள் அவரின் கட்டளைக் கடைபிடிக்கவும், நேர்மையையும், நீதியையும் நாம் வாழும் சமூகத்தில் நிலை நாட்டவும் தீமையை அறவே விட்டுவிட அழைப்பு விடுக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் திருத்தூதர் பவுலின் வழியாகக் கடவுள் எதற்காக நம்மை இவ்வுலக வாழ்விற்கு அழைத்திருக்கின்றார்? அந்த அழைப்பினை நாம் உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? கடவுள் திருமுன் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்முடைய ஞானமெல்லாம் கிறிஸ்துவினிடமிருந்தே வருகின்றது.
ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்ட கிறிஸ்து மலைமீது அமர்ந்து, ஏழைகள் இவ்வலகில் வாழச் இச்சமூகத்தில் தகுதி இல்லாதவர்கள் எனக் கருதபட்ட, அனைவரும் கடவுளின் பார்வையில் தகுதியுடையவர்களாகவும், பாராட்டுக்குறியவர்களாகவும் நற்சான்றுப் பெற்றவர்கள் என ஆறுதல் கூறும் அனைத்து வழிபாட்டு வாசகங்களும், இறைவன் தரும் இம்மாபெரும் விருந்திற்கு அழைக்கின்றார். அழைப்பின் குரலுக்குச் செவிச் சாய்த்துப் பங்கேற்போம் திருப்பலியில் , வார்த்தைகளால் அல்ல! வாழ்வாகத் தொடர்வோம். வாரீர்.
*வாசகமுன்னுரை*
*முதல் வாசக முன்னுரை*
இறைவாக்கினர் செப்பானியா
எசாயாவிற்கு முன் வாழ்ந்தவர். இவருடைய காலத்தில் ஏழைகள் சமுதாயத்தில்
அடிமைகளாக்கப்பட்டு அவதிக்குள்ளானர்கள். இத்தகைய சுழலில் செப்பானியா இறைவாக்கினர்
எழைகளை நோக்கி விடுத்த அறைகூவல் தான் இன்றைய முதல் வாசகம். ஆண்டவரின் கட்டளையைக்
கடைப்பிடிக்க நேர்மையை நாட, மனத்தாழ்ச்சியோடு
ஆண்டவரைத் தேட அழைக்கின்றார். மேலும் ஆண்டவரின் அழிவின் நாளில் ஏழைகளுக்கு அழிவு
நேராது என்றும் ஆறுதல் சொல்லும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
*இரண்டாம் வாசக முன்னுரை*
யூதமக்கள் கிறிஸ்துவின்
சிலுவை மீட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சிலுவை அவமானத்தின் சின்னம். ஆனால் அதன்
மூலமாக வெற்றிக் கொண்டார். கிரேக்கர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை
ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உயிர்ப்பின் மூலம் மீட்பை தந்தார். நம்மை மீட்க மடமை
என்று கருதியதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இறைமகன் தாழ்ச்சி கொண்டார். உலக ஞானத்தை
அடிப்படையாகக் கொண்டு பெருமையைப் பாராட்டாமல் மனத்தாழ்ச்சி கொண்ட இயேசுவின்
பெருமைப் பாராட்ட அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச்
செவிமெடுப்போம்.
*பதிலுரைப்பாடல்*
திருப்பாடல்: 146:7-10
பல்லவி : ஏழையரின் உள்ளத்தோர் பெறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே.ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி
*மன்றாட்டுகள்*
1. எளிய உள்ளத்தோர்
பேறுபெற்றோர் எனெனில் விணிணரசு அவர்களது என்று மொழிந்த எம் இறைவா! எம் திருஅவையின்
அனைத்தும் வெறும் நிறுவனங்களாக அல்லாமல் உம் அன்புப் பணியினை அகில உலகின் எல்லா
மாந்தர்க்கும், வேறுபாடின்றிப்
பணியாற்றிடவும், துணைபுரியும் உதவிக்கரமாக நின்று செயல்படத் தேவையான எளிய மனதினைப்
பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.2. துயருறுவோர் பேருபெற்றோர் என்று கூறிய எம் இறைவா!
இன்று அகில உலகில் வல்லரசு நாடுகள் தங்கள் முதலாளித்துவச்
சர்வாதிகாரத்தை ஏழைநாடுகள், வளரும் நாடுகள் மீது தங்கள் ஆதிக்கத்தை
அதிகாரத்தைச் செலுத்தாமல் அவர்களின் எல்லா நல்ல திட்டங்களிலும், முன்னேற்றங்களிலும்
துணையாளராக இருந்து அவர்களின் நல்வாழ்வுச் சிறந்து விளங்கிட உம் வார்த்தையை
வாழ்வாக்கிடத் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. கனிவுடையோர்
பேறுபெற்றோர் என்று கூறிய எம் இறைவா! இன்றைய சூழலில் இரக்கம் நிறைந்த செயல்கள்
குறைந்து, இரக்கமற்ற செயல்கள் அதிகரிக்கும் இவ்வேளையில்
சிசுக் கொலைகள், வரதட்சனைக்
கொடுமை, குழந்தையின்மையினால் திருமணஉறவுகள் பிரிந்து, ஆதரவற்றவர்களாய் வாழ்பவர்களுக்கு
ஆறுதல் அளித்து உம்இரக்கப் பெருக்கை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. நீதிநிலை வேட்கைக் கொண்டோர் பேறுபெற்றோர் என்று
உரைத்த எம் இறைவா! இன்று எம் தமிழகத்தில் நீதிக்கான பேராட்டங்கள் இல்லாமல்
போய்விடும் என்ற சூழ்நிலை மாறி உலகம் வியந்துப் பார்க்கக்கூடிய அளவில் எம் இளைய
சமுதாயம் அமைதி வழியில், உண்மை வழியில் அனைத்து மத்ததினரும், தோழமை உணர்வோடு ஒன்றிணைந்துத் தங்கள்
பாரம்பரியங்களைப் பாதுகாத்திட, தியாகம்
செய்த அனைத்து உடன்பிறவாச் சகோதரச் சகோதரிகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி, நீர்
கொண்டு வந்த உண்மையான நீதியை நிலைநிற்கச் செய்யத் தேவையான அருளைப் பொழிந்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கமே உருவான எம் இறைவா! இக்காலச்சூழலில்
இரக்கம், தூய்மை உள்ளம் படைத்தோர்,
நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர்,
இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத்
துன்புறுத்தப்படும் போது உமது இரக்கப்பார்வை அவர்கள் மீது பொழியட்டும். அடிமைதனத்திலிருந்து
அன்று எம் முன்னோரை மீட்டவரே இன்று உம்மை மட்டுமே நம்பி வாழும் அனைத்து மக்களையும், இடிந்துபோன
எம் வாழ்வை உமது பேராற்றால் வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கத்தை எம் மீது பொழிய
வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
ww.anbinmadal.org