Monday, June 17, 2024

பொதுக் காலம் ஆண்டின் 12 ஞாயிறு 23-06-2024

பொதுக் காலம் ஆண்டின் 12 ஞாயிறு  


இன்றைய வாசகங்கள்:

யோபு 38:1.8-11
2கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41

திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே இன்று நாம் ஆண்டின் 12ஆம் ஞாயிற்றைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர் என்று கருணையின் கடவுளைப் புகழ்வோம். ஏனெனில் மானுடத்தைப் படைத்து ஒவ்வொரு நொடியும் கண்ணின் இமைபோல மனுகுலத்தைக் காக்கின்றவர். தாயாகத் தந்தையாக நம்மைக் காத்து வருகின்றார்.
இறைவனின்‌ பராமரிப்பு நம்முடன்‌ இருக்கும்போது நமது வாழ்வில்‌ எதைக்‌ கண்டும்‌ அச்சமடையத் தேவையில்லை. இறைவனோடு இணைந்து நடந்தால்‌ இயற்கையும்‌ நம்மோடு இணைந்து நடக்கும்‌. இயற்கைக்கு எதிராக நாம்‌ மாறும்போது இறைவனுக்கு எதிராகவே மாறுகிறோம்‌. இரையாதே! அமைதியாக இரு! என்ற இறைமகன்‌ இயேசுவின்‌ ஒற்றை வார்த்தைக்குப் பொங்கிய கடலும்‌ அடங்கியது. சீடர்களின்‌ நம்பிக்கையும்‌ அதிகரித்தது. அந்த இயேசுவின்‌ மீது நம்பிக்கை கொண்டவர்களாய்‌ இறைவனின்‌ பராமரிப்பை உணர்ந்தவர்களாய்‌ வாழ்வை எதிர்கொள்ளும்போது எத்தகைய இன்னல்களும்‌ துன்பங்களும்‌ சோதனைகளும்‌ நமது வாழ்வில்‌ வந்தாலும்‌ அவற்றையெல்லாம்‌ கடந்து வர முடியும்‌. அதற்கான அருளை வேண்டிப் புனிதப் பலியில்‌ பக்தியுடன்‌ இணைவோம்‌.

வாசக முன்னுரை:

முதல்‌ வாசகம்

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இயற்கையின்‌ வழியாக இறைவன்‌ யோபுவோடு உரையாடுகிறார்‌. தாயின்‌ கருவில்‌ உருவாகும்‌ முன்பே நமக்கு உரு தந்த இறைவன்‌ இயற்கையிலும்‌ தனக்கு உருவம்‌ வைத்திருக்கிறார்‌. இயற்கையும்‌ கடவுளுக்குப் பணிந்து நடக்கும்‌ என்பதை இன்றைய முதல்‌ வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர். அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். - பல்லவி

2.அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. - பல்லவி

3.தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்;  அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. - பல்லவி

4.அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! - பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசகத்தில்‌ திருத்தூதர்‌ பவுல்‌ புரிந்து நகர மக்களுக்கு எடுத்துரைக்கிறார்‌. கிறிஸ்துவோடு இணைந்திருக்கக்கூடிய சூழலில்‌ நாம்‌ புதிதாய்‌ படைக்கப்பட்டவர்கள்‌ போல நற்பண்புகளால்‌ நிறைந்தவராய்‌ இருக்கிறோம்‌. ஆகவே கிறிஸ்துவின்‌ பேரன்பால்‌ ஆட்கொள்ளப்பட்டவர்களாக நாம்‌ வாழ வேண்டும்‌ என்பதை எடுத்துரைக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச் செவி சாய்ப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டு:

1. எம் இறைவா திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசு பணியைச் செவ்வனே ஆற்றிடப் போதுமான ஆற்றல்களை அவர்கள்மீது பொழிந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. என் அன்பு தந்தையே இறைவா எம்நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சி புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்


3. உன்னதரே எம் இறைவா மனிதர்களாகிய நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம்மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது உம் திருமகன் படகில் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் மக்களை மீட்கிறவராகச் செயல் பட்டுக் கடலின் இறைச்சலை கடிந்து அமைதிபடுத்திய நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத் தர வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. திடத்துடன் வாழும் வாழும் திருச்சபையாக வாழ யோபுவின் துன்பங்களை நாங்களும் பகுத்துணர்ந்து, சோதனைகளில் துவண்டு போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில் வாழ்ந்த யோபுவை போன்று எமது திருச்சபை வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. காற்றையும் கடலையும் அடக்கும் இறைவா! வரதட்சணை, கடன் தொல்லை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்களெனப் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் மக்களை உமது இறை பாராமரிப்பில் வைத்துக் காத்து அவர்கள் தீவினைகளில் இருந்த விடுபட வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment