Tuesday, October 19, 2021

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு - ஆண்டு 2
 மறைபரப்பு ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52

திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு. நம் திருஅவை மறைபரப்பு ஞாயிறு கொண்டாடுகிறது,  இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய வாசகங்களின் மூலமாக யாவே இறைவனும், இறைமகன் இயேசுவும் சிதறடிக்கப்பட்ட எல்லா இஸ்ரயேலரைக் கூட்டிச் சேர்த்து ஒரு நாடாக, ஓர் இனமாகக் கூட்டிச் சேர்க்கின்றார்கள்! மீட்டுருவாக்குகிறார்கள்! மீண்டும் நிறைவாழ்வை மலரச் செய்கிறார்கள்! இயேசுவுக்கு அழைப்புக் கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரைத் தேர்ந்துக் கொள்கிறார். தான் தெரிந்து கொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்து முடிக்கின்றார். அவர்களிடம் முழுமையாகத் திரும்புவோம். 


'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்குப் பயன்படுத்தாத ஒரு தலைப்பை இங்குப் பயன்படுத்துகிறார் மாற்கு. . 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்ற மன்னிப்பு வழிபாடு உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்து தான். 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வைப் பெறுவதற்கு முன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார். ஆக, மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும். இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்குத் தெளிவு என்னிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகத்தில் பாரவோன் அடிமைத்ததனத்தில் அல்லலுற்றத் தன் மக்களை இறைவன், மோசேயின் தலைமையில் ஒன்றிணைத்துப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். அழைத்தவர் விடுத்த கட்டளைகளை மறந்தார்கள். அவர்களுக்குப் புது வாழ்வுத் தர இறைவாக்கினர் எரேமியாவை அழைத்தார். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவோன் என்று கூறும் நம் கடவுள் நம்மை ஆதரித்து வழிநடத்தும் உண்மைத் தந்தை இந்த நம்பிக்கைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.  அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

2 "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.  ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

3  ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.  கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

4 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படித் தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். நம் வலுவிக்மையைப் போக்க இயேசுவுக்கு அழைப்பு வந்ததைப் போன்று நாமும் பிறருடைய துன்பங்களைப் போக்க இயேசு நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:

 மறைபரப்பு ஞாயிறு சிறப்பு மன்றாட்டுகள்:

  ஒவ்வொரு மன்றாட்டிற்குப் பிறகும், 'ஆண்டவரே!  எம் மன்றாட்டைக் கேட்டு எம் மறைபரப்புப் பணியை  வலிமைப்படுத்தியருளும்' என்று சொல்லவும்.
 
அகில உலக திருஅவைக்காகவும் அவர்தம் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம்.  

1. கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக வாழும் பேரார்வத்தை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் நமது திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவியர்  மற்றும் பொதுநிலையினருக்காக மன்றாடுவோம்.  இவர்கள் ஒளிக்கு சான்று பகிர்ந்திட தேவையான  உதவியினையும் நல் உடல் உடல்நலத்தையும்  தந்து அவர்களை வலிமைப்படுத்த இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

மறைபரப்புப் பணியாளர்களுக்காகவும், மறைப்பணித்  தளங்களுக்காகவும் மன்றாடுவோம்.


2. ஒவ்வொரு மறைத்தூது தளத்திலும் மறைத்தூதுப்  பணியை மேற்கொள்கின்ற மறைத்தூதுப்  பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம்.  அவர்கள் உமது வார்த்தையை முதல்  முறையாக கேட்பவர்களிடம் உம்மிடமிருந்து  பெற்றுக்கொண்ட அன்பையும் இரக்கத்தையும்  கருணையையும் அனுபவிக்கவும் பகிரவும்  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.  
 
மறைபரப்பு பணிக்கு உதவிபுரியும் அனைவருக்காகவும்  மன்றாடுவோம்.  

3. எங்கள் நல்லாயனே! மறைத்தூது  பணிக்காக தாராளமாக பங்களிப்புச் செய்யும்  அனைவருக்காகவும் மன்றாடுகிறோம்.  ஆரோக்கியத்தையும் அன்பு, அமைதி,  மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வையும் அவர்கள்  அனுபவிக்கும்பொருட்டு அவர்களை மேன் மேலும்  ஆசிர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம். மேலும்  எல்லாவிதமான அடக்கமுறைகள், தீமைகள்  மற்றும் துன்பங்களிலிருந்து பாதுகாத்திடவும்  இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் ப யை வலிமைப்படுத்தியருளும்.

இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் நம்  அனைவருக்காகவும் மன்றாடுவோம்.  

4. உமது அன்பையும், இரக்கத்தையும்,  கருணையையும் அனுபவிக்க எங்களுக்கு  உதவிபுரியும். எங்கள் நம்பிக்கையை  ஆழப்படுத்தும்; நாங்கள் புரிகின்ற சின்னஞ்  சிறிய செயல்களிலும், பேச்சிலும் உம்மைப்  பறைசாற்றவும் எமக்கு உதவும். சிறப்பாக வாழ்வின்  இருள் சூழ்ந்துள்ள இடங்களில் உமது ஒளியைத்  தாங்குபவர்களாக எம்மை மாற்றிட இறைவா  உம்மை மன்றாடுகின்றோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

இறந்துபோன மறைபரப்பு பணியாளர்களுக்காக உம்மை  மன்றாடுவோம்.

5:உமது திராட்சைத் தோட்டத்தில்  ப யாற்றும்போது, மரித்த மறைபரப்புப்  பணியாளர்களுடைய, சிறப்பாக, சரியான உணவும்  மருந்தும் எவ்வித அடிப்படை வசதிகள் ஏதுமின்றி,  நோய்வாய்பட்டு, சிறையில் இருந்தவர்களுடைய  ஆன்மாக்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம்.  அவர்களது மறைத்தூதப் பணிக்கான ஆர்வத்திற்கு  கைமாறு அளித்து, உமது வானக அரசில் உம்மோடு  இருக்க, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  


 ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்
.  

 

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1.அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!   எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர்   திருஅவையோடு மறைப்பணியச் சிறப்புடன் செய்ய தேவையான ஞானத்தையும்,  விவேகத்தையும் பெற்றிடவும், சுயநலன்களை நோக்காமல், இயேசுவைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு சேவை புரியவும் வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் நம்பிக்கையான எம் இறைவா! நமக்கு எதிராக இருப்பவர்களைக் கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் நண்பனே எம் இறைவாதேவையான இறைஅழைத்தல் தந்திடவும், அனைத்து கிறிஸ்தவர்களும் நற்செய்தியை அறிவுக்கும் கருவியாக மாறவும், அதற்குதேவையான ஞானத்தையும், மன உறுதியும் தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


4.இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே சுயத்தை இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீயச் சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி உமது சாட்சிகளாய் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment