Sunday, January 4, 2026

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா - முதல் ஆண்டு

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

எசாயா: 42:1-4,6-7 
திருத்தூதர் பணிகள்: 10:34-38 
மத்தேயு: 3:13-17

திருப்பலி முன்னுரை:

திருவழிபாடு ஆண்டின் பொதுக் காலத்தின் முதல் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர் இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.
திருமுழுக்குப் பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தெளிவாக இன்றைய வாசகத்தின் வழியாகப் பதிவுச் செய்கிறார். இதோ என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது என்ற ஆண்டவர் பெருமிதம் கொள்கின்றார். அவர் வழியாக நாம் அடையவிருக்கும் நன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்டுச் சிந்தித்து ஆண்டவரில் பூரிப்படைவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

1. இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கு ஏற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி

2. ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி

3. ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

இந்த இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட, பெறப்போகும் அருள்வளங்களை எடுத்துரைக்கின்றார். கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. அலகையின் சோதனைகளிலிருந்து நம்மை விடுவித்து என்றும் நன்மை செய்துகொண்டே இருக்கின்றார். இறைவாக்கினார் எசாயாவைப் போல் புனித திருத்தூதர் பேதுருவும் ஆண்டவரின் அருள்கொடைகளை ஆழமாக நம் உள்ளத்தில் பதிவுச் செய்யும் இவ்வாசகத்தைக் கவனித்து இறையருள் பெறுவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவை சிறப்பிக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், திருமுழுக்கு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு ஏற்ற வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றும், எங்கும் நன்மை செய்துகொண்டே சென்ற இயேசுவிடம் இருந்த மனநிலையோடு, நாங்கள் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகாளும் தலைவர்களும், எம்தாய்த்திருநாட்டை ஆட்சி புரிவோரும் “நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது” என்று கடவுளும், தேர்ந்தெடுத்த மக்களும் பூரிக்கும் வண்ணம் நல்லாட்சி நடத்தவும், நேர்மையாகச் செயல்படுபவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும், அமைதியை நாடுவதிலும், அனைவருக்குமான நலத்தில் முனைப்பாய் இருப்பதிலும், தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘இதோ! என் ஊழியர்!’ என ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட குருக்களும், துறவியரும், மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் இருந்து, பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரை மீட்கவும், இன்னபிற தொண்டுகளை ஆற்றவும், நீர் தாமே ஆசி அருள வேண்டுமென்றும், இன்னும் பல பேர், தேவ அழைத்தல் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளின் பிள்ளைகளாய் நாங்கள் இருந்து, இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை நம்பும் மக்களாகவும் திகழ்ந்து, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், உழைக்கும் இடங்களிலும், வாழும் சமுதாயத்திலும், அமைதியின் தூதுவர்களாகவும், இறைவனுக்கும், மனிதருக்கும் ஏற்புடையவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம்மில் ஒருவரைப் போல் திருமுழுக்குப் பெற்ற இயேசுவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் தமிழ்ச் சொந்தங்களோடு சேர்ந்து, நன்றி பாராட்டுதல், உழவரையும் உழைப்பவரையும் மதித்தல், பிற உயிரனங்களையும் மாண்புடன் நடத்துதல், காண்போரை எல்லாம் மனம் நிறைய வாழ்த்துதல் ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடி, பிறக்கின்ற தை முதல், பொங்கும் மகிழ்வுடன், வாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Friday, January 2, 2026

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

 ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1.ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12

திருப்பலி முன்னுரை 

இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!

நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர்.

பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்க வேண்டும்” என்கிறார்.

அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப் போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...

வாசக முன்னுரை

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின்போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். பாபிலோனிய அடிமைத் தளையாலே அழிந்துபட்ட எருசலேமுக்கும், அல்லல்பட்ட இஸ்ரயேலருக்கும் ஆறுதல் மொழிகளாக எழுதப்பட்டவை. எருசலேம் புத்துயிர் கொள்ளும் என்று நம்பிக்கையூட்டும் இன்றைய வாசகம் இயேசுவின் இறைக் காட்சியால் அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர் என்பதைக் காட்டுகிறது. கவனமுடன் செவிமெடுப்போம் இவ்வாசகத்தை.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.

1. கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  பல்லவி.

2. அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார்.  பல்லவி.

3. தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  பல்லவி.

4. தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.  பல்லவி.

இரண்டாம் வாசகம்

கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைக் கண்டு ஆராதித்தது ஒரு அடையாளம், ஒரு மறைபொருள். யூதருக்கு மட்டும் இயேசு அரசரன்று, மக்களினத்தார் அனைவருக்கும் அவர் மன்னர் என்பதைச் சுட்டுகிறது இந்நிகழ்ச்சி (மத் 2:1-12). பவுல் அடியாரும் இம்மறைபொருளின் கருத்தை அறிந்து, புறவினத்தாருக்காகப் பாடுபட்டு உழைப்பதை விளக்குகிறது இன்றைய வாசகம். இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவினை கொண்டாடுகிற இந்நாளில், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவையின் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். “எருசலேமே! எழு! ஒளிவீசு! ஆண்டவர் உன்மீது எழுந்தருள்வார், அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்” என்கிற எசாயாவின் இறைவாக்கு புதிய எருசலேமாகிய திருஅவையில் மெய்ப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கடவுளே, நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” என்கிற திருப்பாடல் வரிகள், நாங்கள் வாழுகிற இக்காலக்கட்டத்தில் உலகாளும் தலைவர்களுக்கும், நாடாளும் ஆட்சியாளருக்கும் பொருந்துவனவாக. நீதியும், மிகுந்த சமாதானமும் செழிக்கும் பூமியாக, இந்தப் பூவுலகை மாற்றிட, மாந்தர் அனைவரும், பிரிவினையைத் துறந்து, ஒற்றுமையாய் இணைந்து, உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. விண்மீன் எழக்கண்ட ஞானியர், அதனைப் பின்தொடர்ந்து, இயேசுவை வந்தடைந்தது போல, எம் இளையோரும், பிள்ளைகளும், உண்மை ஒளியாகிய உம்மை வந்தடைய வேண்டுமென்றும், காலத்தின் அறிகுறிகளையும், அறிவியல் முன்னேற்றங்களையும், தவறாகக் கையாண்டு, அவைகளுக்கு அடிமைகளாகாமல், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறவும், ஒளிமயமான எதிர்காலத்தை இவ்வுலகில் மட்டுமன்றி, நிலைவாழ்விலும் கண்டடைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாதான், இந்தியர்களாகிய எங்களுக்கும், யூதரல்லாத அனைத்து இன மக்களுக்கும் உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவாக அமைந்திருந்தது. யாம் பெற்ற விசுவாச ஒளிக்காக நன்றி செலுத்தும் வேளையில், இன்னும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும், இனங்களுக்கும், நாங்கள் நற்செய்தியின் தூதுவர்களாய் அமையவும், மறைபரப்பு பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோர் உமது ஆற்றலை முழுமையாய் உணர்ந்து தொடர்ந்து பயணிக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. ஆண்டவரால் கனவில் எச்சரிக்கப்பட்டதால், வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய ஞானியரைப் போலவும், யோசேப்புவின் தலைமையிலான திருக்குடும்பம் போலவும், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இயேசுவின் உடனிருப்பை உறுதி செய்யும் வகையில், இறை ஏவுதலுக்குப் பணிந்து. எம்வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைதித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, December 28, 2025

புத்தாண்டு சிறப்புத் திருப்பலி அன்னை மரியாள் -இறைவனின் தாய்

புத்தாண்டு சிறப்புத் திருப்பலி 
அன்னை மரியாள் -இறைவனின் தாய் 01.01.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. எண்ணிக்கை6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

திருப்பலி முன்னுரை

புனித கன்னிமரியா இறைவனின் அன்னை என்ற சத்திய வாக்குதான் புலர்கின்ற புத்தாண்டின் நுழைவாயில். காலம் புதிய ஆண்டு என்ற புத்தாடையை அணிந்து உற்சாகத்தோடு தன் பயணத்தைத் தொடங்குகிறது. பூமி பந்து புதுப்பொலிவுடன் சூரியனைச் சுற்றி தனது அடுத்த சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறது. கடந்த காலம் நமக்களித்த அளப்பரிய நன்மைகளுக்காய் நன்றி நவில்வோம். அதே நேரத்தில் அவை நமக்குக் கற்றுக் கொடுத்தப் பாடல்கள் கணக்கற்றவை. நெஞ்சில் ஆழமாய் பதிந்த ஏமாற்றம், இடர்பாடு, துன்பம், கவலை, போராட்டம் ஆகிய அனைத்தும் கற்பூரமாய் கரைந்துபோகட்டும். இனிவரும் வாழ்க்கை கற்கண்டாய் இனிக்க, கனவுகள் மெய்ப்பட, புவி ஈர்ப்பு விசை மீறி முகம் காட்டிச் சிரிக்கும் காட்டுப் பூவாய் புதிதாய் சிந்திக்க புத்தாண்டு நமக்கு ஒரு வயதை சேர்த்துத் தருகிறது. பழையதை கடந்து புதிய சூழலை ஏற்க முன்வருவோம். அன்னை கன்னி மரியாவைப் போலக் கடந்த கால யூத சமூகத்தைக் கண்டு கவலை கொள்ளாமல், எதிர்காலத்தில் என்ன சொல்வார்களோ என்று ஏங்காமல், இன்றே இப்பொழுதே “நான் உமது அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று புறப்பட்டது போல் புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: 

அன்று இஸ்ரயேல் மக்கள் மோசே வழியாக ஆண்டவரிடமிருந்து பெற்ற ஆசியை இன்று நம் தாய்த் திரு அவை புத்தாண்டு பரிசாக நமக்கு வழங்குகிறது. பாதுகாப்பையும், அமைதியையும், அருளையும் சுமந்துவரும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1-2, 4, 5,7
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

இயேசுவின் பிறப்பு நமக்கும் அவருக்குமிடையே சகோதர உறவையும், நமக்கும் கடவுளுக்குமிடையே தந்தை, பிள்ளை என்ற குடும்ப உறவையும் வழங்குகிறது. நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடன்பிறவா சகோதரர்கள் எனக் கூறும் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியாவின் திருவிழாவோடு புதிய ஆண்டினை தொடங்கிடும் திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், அனைத்தையும் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாவைப் போலவும், தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிச் சென்ற இடையர்கள் போலவும், எங்கள் இறைவேண்டலாலும், செயல்பாட்டாலும், உயிருள்ள சாட்சிய வாழ்வை மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இனி நீங்கள் அடிமைகளல்ல” என்கிற பவுலடியாரின் வார்த்தைகள், அனைத்து உலகிற்கும், வையத்தில் வாழும் அனைவருக்கும், அச்சமில்லாத மனதையும், அனைவரும் சமம் என்கிற உணர்வையும், எல்லாரும் உரிமைப்பேறு உடையோரே என்கிற உள்ளுணர்வையும் உண்டாக்கவும், அமைதி நிறை உலகையும், செழுமை மிகு தேசத்தையும் உருவாக்கும் விதத்தில் தலைவர்களும் குடிமக்களும் உழைத்திடத் தேவையான அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பி, தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பி, கண்ணுக்குப் புலப்படாத கடவுளை ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடும் பேற்றினைத் தந்திருப்பதற்காக நன்றி சொல்லும் வேளையில், நம் பங்குத்தளமும், பங்குக் குருக்கள், பங்குப் பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள், சிறுவர், இளைஞர், பெண்களை  உள்ளடக்கிய அமைப்புகள், பாடகர் குழுக்கள் ஆகிய அனைவரும், மூவொரு இறைவனிடம்  காணப்படும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விசுவாசக் குடும்பமாகச் செயல்பட, நீர் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புத்தாண்டு புலர்கின்ற இந்தப் புனித நேரத்தைக் களியாட்டத்தோடு தொடங்குகிற எண்ணிறந்த மக்களின் நடுவே, உம்முடைய பிரசன்னத்தில் கூடியுள்ள எங்களுக்கு “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!” என்கிற ஆசிமொழி உண்மையிலேயே உரித்தாகிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
       
5. புத்தாண்டுத் திருப்பலியில் கூடப் பங்குபெற முடியாமல் தவிக்கின்ற உடல் நலமற்றோர், முதியோர், கைவிடப்பட்டோர், அகதிகள், வேலையின்றி தவிப்போர், வறுமையில் உழல்வோர், விளிம்புநிலை மக்கள், போன்ற எல்லோர் வாழ்விலும் சூழ்ந்திருக்கும் இருளைப்போக்கி, ஆண்டவர் தம் திருமுகத்தை அவர்கள் பக்கம் திருப்பி, அமைதி அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Saturday, December 27, 2025

திருக்குடும்பத் திருவிழா

 திருக்குடும்பத் திருவிழா - 28.12.2025  

 

இன்றைய வாசகங்கள்:

1. சீராக்கின் ஞானம் 3:2-7, 12-14அ
2. கொலோசையர் 3:12-21
3. மத்தேயு 2:13-15, 19-23   

திருப்பலி முன்னுரை 

இறை நம்பிக்கையின் மகிழ்வை உலகுக்கு வழங்குவதில் உப்பாக, ஒளியாகத் திகழ்ந்த திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட கூடியுள்ள உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். குடும்பம் ஒரு கோயில், அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். சிறந்த குழந்தையை வளர்ப்பது சிறந்த தலைமுறையை வளர்ப்பதாகும். மனத்தூய்மை, பணிவுடைமை, இன்சொல் பேசுவது, எளிமை, சிக்கனம், பகை மறத்தல் போன்ற பண்புகளில் வளரும் குடும்பம் நீதியிலும், நிம்மதியிலும் நீடுவாழும். தாய் தந்தையரின் அன்பு வாழ்வு குழந்தையை வழிநடத்தும் உந்து சக்தியாகும். சேர்ந்து உண்பது, சேர்ந்து செபிப்பது, பகிர்ந்து வேலை செய்வது குடும்பங்களில் உறவை வளப்படுத்தும். அன்பின் வெளிப்பாடான சகிப்புத்தன்மை கொண்டு பெற்றோரை, நோயுற்ற வயோதிகரை சுமையாகப் பார்க்காமல், பாசத்தோடு பேணிக் காப்பதில் புண்ணியம் நிறைந்துள்ளது. விட்டுக்கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை உணர வேண்டும். ஆபிரகாம் - சாராள், ஈசாக்கு ரெபேக்கா, தொபியா சாரா, செக்கரியா எலிசபெத், மரியா யோசேப்பு இவர்களின் குடும்பங்களைப் போன்று நற்பண்புகள் நிறைந்த குடும்பங்களாக நம் குடும்பங்கள் திகழ அருள்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.  

முதல் வாசக முன்னுரை: 

 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாய் தந்தையை பேணி வளர் என்ற அவ்வையின் (ஔவையின்) ஆத்திசூடி இங்கே சீராக்கின் ஆத்திசூடியாய் வெளிப்படுகிறது. பெற்றோரைப் பேணி நடக்கும்போது இறையருள் நிறைந்தவர்களாக வளர, வாழ முடியும் என்பதை எடுத்துரைக்கும் வாசகத்திற்கு செவிமடுப்போம். 

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2,3,4-5
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி

2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

குடும்பம் குறித்தும், குடும்ப உறவுகள் குறித்தும், தூய பவுலடியாரின் அறிவுரைகளை இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது. அன்பு நிறைந்த வாழ்வு, குடும்ப தலைவன் தலைவி பிள்ளைகள் ஆகியோரின் கடமைகள்குறித்து ஆழமாக எடுத்துரைக்கும் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: 

கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக ! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. திருக்குடும்ப பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், எம் அனைவருக்கும் பொதுவான குடும்பமாய்த் துலங்கும் திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். நாங்கள் எல்லோரும் ‘கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள்’ என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாக, எம் அழைத்தலுக்கு ஏற்ற வாழ்க்கையை மேற்கொள்ள அருள்பெற   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒரு கொடியவனின் ஆட்சியில் இறைமகனுக்குக்கூட பாதுகாப்பில்லை என்பதைச் சித்தரிக்கும் இன்றைய நற்செய்தி, எம் உலகில் இன்றும் நிலவுகிற அவல நிலையை உணர்த்துகிறது. சண்டைகளற்ற சகஜநிலையும், சமாதானமும், சமத்துவமும், சமூக நீதியும், சமயச்சார்பின்மையும், மனித மாண்பும் செழிக்கும் ஒரே குடும்பமாக, எங்கள் தேசமும் இந்த உலகும் திகழ்ந்திட வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆண்டவருக்குப் பணிந்து நடப்போராகவும், தந்தையரை மதிப்போராகவும், அன்னையரை மேன்மைப்படுத்துவோராகவும், கணவருக்குப் பணிந்திருக்கும் மனைவியராகவும், மனைவியரிடம் அன்பு செலுத்தும் கணவராகவும், பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் குழந்தைகளாகவும், பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாத பெற்றோர்களாகவும் வாழ்ந்து, எம்குடும்பத்தைத் திருகுடும்பமாகக் கட்டியமைத்து, ஆண்டவர் மிகுதியாக மேன்மைப்படுத்தும் குடும்பங்களாக மாறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ள எம்பங்கு மக்களும், அன்பியங்கள் அனைத்தும், நாங்கள் ஒவொருவருமே, பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் எங்களை அணிசெய்து. ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டும். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னித்தும். அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும் அன்புடன் வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.     
  
5. உலகெங்கும் வாழ்கிற வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட பெற்றோர், மற்றும் புறக்கணிக்கப்பட்ட முதியோர், கைவிடப்பட்ட மனைவியர் மற்றும் கணவர்கள், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், அகதிகளாக்கப்பட்ட மக்கள் போன்ற அனைவரும் இந்த உலகம் என்கிற குடும்பத்தில் தங்களுக்கான இடத்தைக் கண்டடைய, நீர் தாமே அருள்கூர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.     

https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, December 18, 2025

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - 25.12.2025

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - 25.12.2025

இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

நல்லிரவு திருப்பலி

இன்றைய நற்செய்தி:

எசாயா 9:2-4, 6-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை

மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம். 

உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

 

முதல் வாசக முன்னுரை: எசாயா 9:2-4, 6-7

 இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கிறார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார், அவர்களை ஆட்சி செய்ய, வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்து நீதியும் நேர்மையும் நிறைந்த ஆட்சியை உறுதிப்படுத்தினாரெனக் கூறும் வாசகத்திற்கு செவிமடுப்போம்
.

பதிலுரைப் பாடல்: 

திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11) 
பல்லவிஇன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!
1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; -பல்லவி

2. அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.  பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

3. விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

4. ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: தீத்து 2:11-14

இன்றைய இரண்டாம் வாசகத்தில், நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும் எல்லா நெறிகேடு களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குரியவராய் மாற்றவும் தம்மையே ஒப்படைத்த தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: 

பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார்.

நற்செய்தி: லூக்கா 2:1-14

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும்,  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும்  நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      

5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.              


விடியற்காலத் திருப்பலி



இன்றைய வாசகங்கள்

I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை: 

விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும்

மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம். 

உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை:-

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,6. 11-12

பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.

1. ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி


2. நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:தீத்து 3:4-7

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

நற்செய்தி:லூக்கா 2:15-20

நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும்,  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும்  நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
     
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       
 

பகல் திருப்பலி:-

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.யோவான் 1:1-18

திருப்பலி முன்னுரை: 

வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம். 

உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம். 


முதல் வாசக முன்னுரை: எசாயா 52:7-10

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்: 

திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6 (பல்லவி: 3b)
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3. உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

4.யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 1:1-6

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி:யோவான்: 1:1-18

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும்,  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும்  நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
     
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்!   


https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, December 17, 2025

திருவருகை காலம் 4ஆம் ஞாயிறு ஆண்டு 1


திருவருகை காலம் 4ஆம் ஞாயிறு  ஆண்டு 1

 
இன்றைய வாசகங்கள்:

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு 1:18-24

திருப்பலி முன்னுரை

அமைதி என்னும் திரு ஒளி ஏற்றித் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு திரு அவை நம்மை அன்போடு அழைக்கிறது. 'கடவுள் நம்மோடு' என்பதுதான் இன்றைய வழிபாட்டின் கருப்பொருள். 

தேடல்கள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அழைப்பை ஏற்று  திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் விடைப் பெற்றிட வந்துள்ள இறைக்குலமே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து  சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு, எந்நேரத்திலும் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.

தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்தக் கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: எசாயா 7:10-14

“இதோ கன்னிப்பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” என்ற கடவுளின் அடையாளத்தை இறைவாக்கினர் எசாயா வெளிப்படுத்துகிறார். இந்த நம்பிக்கையின் அடையாளத்தைப் பெற்றுள்ள நாமும் இன்றைய சமூகத்தில் நம்பிக்கையின் அடையாளங்களாகத் திகழும் மனவுறுதியோடு முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b)
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1.மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

2. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

3. இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: உரோமையர் 1:1-7

இயேசுவே நமக்கு நற்செய்தி, அவரது பணியாளர்களான நமது வாழ்வும் நற்செய்தியாக ஒளிர வேண்டும். நம் பணிகள் என்னென்ன என்பதை எடுத்துரைப்பதே புனித பவுலடியார் தரும் இன்றைய இரண்டாம் வாசகம். திருவருகைக் காலத்தில் நமது கடமைகளை, பணிகளை நினைவூட்டும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா

நற்செய்தி: மத்தேயு 1:18-24

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இயேசு கிறிஸ்துவின் பணியாளர்களாகவும், கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப் பட்டவர்களுமாகிய திருஅவைத் தலைவர்களுக்காகவும், குறிப்பாகத் திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மிக விரைவில் வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவினை, எங்களுக்கு மட்டுமின்றி, மாந்தர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விழாவாகக் கொண்டாடிடும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!” என்கிற பவுலடியாரின் வாழ்த்து, இந்தப் பூவுலகில் மெய்ப்பட வேண்டுமென்றும், உலகத் தலைவர்களும், எம்நாட்டை ஆள்வோரும், அமைதியின் பாதையில் பயணித்து, மக்கள் அனைவரையும் சமய, சமூகப் பாகுபாடின்றி, ஒருதாய் மக்களாகப் பாவிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவருகைக் கால வளையத்தின் நான்காம் மெழுகுதிரியை ‘அன்பின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்நாளில், ‘கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு’ எனத் தம் திருமடலைத் தொடங்கும் பவுலடியாரின் கூற்றுப்படி, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அன்பின் மக்களாக விளங்கி, இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், பிறரன்பு செயல்களில் எம்மையே அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திருமுழுக்கு யோவான் விடுத்த மனமாற்றத்திற்கான அழைப்பினை கடந்த வாரங்களில் கேட்டு வந்த நாங்கள், மனிதரின் பொறுமையையும், கடவுளின் பொறுமையையும் சோதிக்கும் மக்களாக வாழாமல், நல்லதொரு பாவசங்கீர்தனம் செய்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாகும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ‘அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என யோசேப்புவுக்கு வானதூதர் சொல்லிய நற்செய்தி, கன்னி மரியாவின் வழியாக நிறைவேறியதை நன்றியோடு கொண்டாடி மகிழுகிற நாங்கள், எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், இயேசு என்னும் இம்மானுவேல் பிறந்திட, தகுந்த விதத்தில் தயாரிக்கவும், ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்கிற உணர்வோடு, வாழ்க்கையை நடத்தவும், அருள் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, December 8, 2025

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 35:1-6,10 
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

திருப்பலிமுன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - மகிழ்ச்சியின் ஞாயிறு. மகிழ்ச்சி என்னும்‌ திருவிளக்கேற்றி, ஒளியின்‌ கடவுளாகிய இயேசுவுக்குச்‌ சான்று பகர வருகை புரிந்துள்ள அன்பு இறைமக்களே, உங்கள்‌ அனைவரையும்‌ திருவருகைக்‌ காலம்‌ மூன்றாம்‌ ஞாயிறு வழிபாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கிறோம்‌.

மீண்டும் இறைவாக்கினர் எசாயா அகமகிழ்ந்து பூரித்துக் கூறுவதாவது பாழ்நிலங்கள் புத்துயிர் பெற்றுப் பூத்துக் குலுங்கும். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் காண்பார்கள். மக்கள் அனைவரும் நலமும் வளமான வாழ்வும் பெற்றுப் பெரும் மகிழ்ச்சியில் சீனோனுக்கு வருவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும் என்றார்.

பயிரிடுபவரைப் போலக் காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருங்கள். தண்டனைத்தீர்ப்பு ஆளாகாதவாறு உங்களைக் காத்துகொள்ளுங்கள் என்று திருத்தூதர் யாக்கோபு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் மெசியாவைக் கண்டு கொண்டதின் மகிழ்ச்சியில் தம் சீடர்களை உறுதிசெய்ய அனுப்பிவைக்கின்றார். இறைவாக்கினரை விட மேலானவர் என்றும் மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவர் என்றும் தன் முன்னோடிக்குப் புகழ்மாலைச் சூட்டுகிறார். ஆம் அன்பர்களே யோவாயைப் போல் மெசியாவைக் கண்டுணர்ந்துக் கரடுமுரடான பாதையை வெற்றிகரமாகக் கடந்து அவர்தரும் நிலைவாழ்வை மகிழ்ச்சியோடு நோக்கிப் பயணிக்க அவரின் உடனிருப்பை தேடி, வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எசாயா நூலிருந்த எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம் அடிமைத்தனத்தலிருந்து விடுபட்டுத் திரும்பும் இஸ்ரயேலரின் மனநிலையைப் பிரதிப்பலிக்கின்றது. யாவே கடவுள் பாழ்நிலங்களைச் சோலையாக மாற்றுகிறார். நலிவுற்றோரைப் புதுபலன் பெற்றவைத்துப் பயணிக்க வைக்கிறார். மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் முகம் மலர்ந்திருக்கும். மெசியாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் எசாயாவின் இவ்வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பதிலுரை: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7,8,9,-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.  பதிலுரை

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பதிலுரை 

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! 
பதிலுரை

இரண்டாம் வாசக முன்னுரை

பயிர்செய்வோர் எப்படிப் பொறுமைக் காத்துக் காலம் கனியும் வரை காத்திருந்து தன் உழைப்பின் பயனைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதைபோல் நாம் ஆண்டவரின் வருகைக்கு நம் உள்ளங்களை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரைக் கூறும் திருத்தூதர் யாக்கோபு, ”நடுவர்கள் வந்து விட்டார்கள். எனவே நிலைவாழ்வைக் காத்துக்கொள்ள நம்பிக்கையோடு பயணியுங்கள்” என்று விடுக்கும் மகிழ்சிசியின் அழைப்பைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை அகமகிழ்வின் ஞாயிறாகக் கொண்டாடுகிற திருஅவையோடு இணைந்து, திருத்தந்தை லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். வரவிருப்பவர் தாம் தான் என்பதை, தமது செயல்கள்மூலம் கண்டுணரலாமென, நற்செய்தியில் எடுத்துரைக்கும் இயேசுவைப் பின்பற்றி, திருஅவையானது தனது சான்று பகரும் வாழ்வால், இயேசுவின் வருகையைப் பறைசாற்றிட, உமது அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால வளையத்தின் மூன்றாம் மெழுகுதிரியை ‘மகிழ்ச்சியின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், “ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் துன்பமும் துயரமும் பறந்தோடும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு இந்தப் பூவுலகில் மெய்ப்படவேண்டுமென்றும், அமைதி, நீதி, சமத்துவம் செழிக்கும் பூமியாக இந்த வையகம் விளங்கிட உலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், உலக மக்கள் யாவருமே உழைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பயிரிடுபவரை முன்மாதிரியாய் நிறுத்தி யாக்கோபு சுட்டிக்காட்டுகிற, துன்பத்தைத் தாங்குதல், பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகிய நற்குணங்களில் நாங்கள் வளர வரம் வேண்டும் அதே வேளையில், சமீபத்திய புயல் மற்றும் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வில், அரசு தரும் இழப்பீடுகளைத் தாண்டி, நீர் செயல்படவேண்டுமென்றும், அவர்கள் குறையின்றி வாழ வழிபிறக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்கிற முதல் வாசக அறைகூவலுக்கு செவிசாய்த்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு உற்சாகம் தந்து, இயலாதவர்களுக்கு உதவுபவர்களாகத் திகழ்ந்து, கிறிஸ்துவின் வருகைக்கு உண்மையிலேயே தயாரிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. ‘மனிதராய்ப் பிறந்தவர்களுள் இவரைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை’ என இயேசுவாலேயே சுட்டிக்காட்டப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாலைவனக் குரலைக் கேட்டு, ஆண்டவரின் பாதையை ஆயத்தம் செய்யும் மனிதர்களாய் நாங்கள் இருந்து, விண்ணகத்தில் மிகப்பெரியோராய் இடம்பெறுகிற அருள் பெற்றிட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF