Thursday, December 18, 2025

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - 25.12.2025

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - 25.12.2025

இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

நல்லிரவு திருப்பலி

இன்றைய நற்செய்தி:

எசாயா 9:2-4, 6-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை

மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம். 

உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

 

முதல் வாசக முன்னுரை: எசாயா 9:2-4, 6-7

 இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கிறார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார், அவர்களை ஆட்சி செய்ய, வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்து நீதியும் நேர்மையும் நிறைந்த ஆட்சியை உறுதிப்படுத்தினாரெனக் கூறும் வாசகத்திற்கு செவிமடுப்போம்
.

பதிலுரைப் பாடல்: 

திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11) 
பல்லவிஇன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!
1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; -பல்லவி

2. அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.  பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

3. விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

4. ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: தீத்து 2:11-14

இன்றைய இரண்டாம் வாசகத்தில், நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும் எல்லா நெறிகேடு களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குரியவராய் மாற்றவும் தம்மையே ஒப்படைத்த தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: 

பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார்.

நற்செய்தி: லூக்கா 2:1-14

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும்,  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும்  நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      

5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.              


விடியற்காலத் திருப்பலி



இன்றைய வாசகங்கள்

I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை: 

விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும்

மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம். 

உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை:-

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,6. 11-12

பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.

1. ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி


2. நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:தீத்து 3:4-7

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

நற்செய்தி:லூக்கா 2:15-20

நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும்,  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும்  நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
     
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       
 

பகல் திருப்பலி:-

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.யோவான் 1:1-18

திருப்பலி முன்னுரை: 

வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம். 

உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம். 


முதல் வாசக முன்னுரை: எசாயா 52:7-10

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்: 

திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6 (பல்லவி: 3b)
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3. உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

4.யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 1:1-6

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நற்செய்தி:யோவான்: 1:1-18

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும்,  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும்  நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
     
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்!   


https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, December 17, 2025

திருவருகை காலம் 4ஆம் ஞாயிறு ஆண்டு 1


திருவருகை காலம் 4ஆம் ஞாயிறு  ஆண்டு 1

 
இன்றைய வாசகங்கள்:

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு 1:18-24

திருப்பலி முன்னுரை

அமைதி என்னும் திரு ஒளி ஏற்றித் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு திரு அவை நம்மை அன்போடு அழைக்கிறது. 'கடவுள் நம்மோடு' என்பதுதான் இன்றைய வழிபாட்டின் கருப்பொருள். 

தேடல்கள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அழைப்பை ஏற்று  திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் விடைப் பெற்றிட வந்துள்ள இறைக்குலமே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து  சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு, எந்நேரத்திலும் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.

தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்தக் கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: எசாயா 7:10-14

“இதோ கன்னிப்பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” என்ற கடவுளின் அடையாளத்தை இறைவாக்கினர் எசாயா வெளிப்படுத்துகிறார். இந்த நம்பிக்கையின் அடையாளத்தைப் பெற்றுள்ள நாமும் இன்றைய சமூகத்தில் நம்பிக்கையின் அடையாளங்களாகத் திகழும் மனவுறுதியோடு முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b)
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1.மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

2. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

3. இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: உரோமையர் 1:1-7

இயேசுவே நமக்கு நற்செய்தி, அவரது பணியாளர்களான நமது வாழ்வும் நற்செய்தியாக ஒளிர வேண்டும். நம் பணிகள் என்னென்ன என்பதை எடுத்துரைப்பதே புனித பவுலடியார் தரும் இன்றைய இரண்டாம் வாசகம். திருவருகைக் காலத்தில் நமது கடமைகளை, பணிகளை நினைவூட்டும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா

நற்செய்தி: மத்தேயு 1:18-24

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இயேசு கிறிஸ்துவின் பணியாளர்களாகவும், கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப் பட்டவர்களுமாகிய திருஅவைத் தலைவர்களுக்காகவும், குறிப்பாகத் திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மிக விரைவில் வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவினை, எங்களுக்கு மட்டுமின்றி, மாந்தர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விழாவாகக் கொண்டாடிடும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!” என்கிற பவுலடியாரின் வாழ்த்து, இந்தப் பூவுலகில் மெய்ப்பட வேண்டுமென்றும், உலகத் தலைவர்களும், எம்நாட்டை ஆள்வோரும், அமைதியின் பாதையில் பயணித்து, மக்கள் அனைவரையும் சமய, சமூகப் பாகுபாடின்றி, ஒருதாய் மக்களாகப் பாவிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவருகைக் கால வளையத்தின் நான்காம் மெழுகுதிரியை ‘அன்பின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்நாளில், ‘கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு’ எனத் தம் திருமடலைத் தொடங்கும் பவுலடியாரின் கூற்றுப்படி, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அன்பின் மக்களாக விளங்கி, இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், பிறரன்பு செயல்களில் எம்மையே அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திருமுழுக்கு யோவான் விடுத்த மனமாற்றத்திற்கான அழைப்பினை கடந்த வாரங்களில் கேட்டு வந்த நாங்கள், மனிதரின் பொறுமையையும், கடவுளின் பொறுமையையும் சோதிக்கும் மக்களாக வாழாமல், நல்லதொரு பாவசங்கீர்தனம் செய்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாகும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ‘அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என யோசேப்புவுக்கு வானதூதர் சொல்லிய நற்செய்தி, கன்னி மரியாவின் வழியாக நிறைவேறியதை நன்றியோடு கொண்டாடி மகிழுகிற நாங்கள், எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், இயேசு என்னும் இம்மானுவேல் பிறந்திட, தகுந்த விதத்தில் தயாரிக்கவும், ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்கிற உணர்வோடு, வாழ்க்கையை நடத்தவும், அருள் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, December 8, 2025

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 35:1-6,10 
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

திருப்பலிமுன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - மகிழ்ச்சியின் ஞாயிறு. மகிழ்ச்சி என்னும்‌ திருவிளக்கேற்றி, ஒளியின்‌ கடவுளாகிய இயேசுவுக்குச்‌ சான்று பகர வருகை புரிந்துள்ள அன்பு இறைமக்களே, உங்கள்‌ அனைவரையும்‌ திருவருகைக்‌ காலம்‌ மூன்றாம்‌ ஞாயிறு வழிபாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கிறோம்‌.

மீண்டும் இறைவாக்கினர் எசாயா அகமகிழ்ந்து பூரித்துக் கூறுவதாவது பாழ்நிலங்கள் புத்துயிர் பெற்றுப் பூத்துக் குலுங்கும். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் காண்பார்கள். மக்கள் அனைவரும் நலமும் வளமான வாழ்வும் பெற்றுப் பெரும் மகிழ்ச்சியில் சீனோனுக்கு வருவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும் என்றார்.

பயிரிடுபவரைப் போலக் காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருங்கள். தண்டனைத்தீர்ப்பு ஆளாகாதவாறு உங்களைக் காத்துகொள்ளுங்கள் என்று திருத்தூதர் யாக்கோபு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் மெசியாவைக் கண்டு கொண்டதின் மகிழ்ச்சியில் தம் சீடர்களை உறுதிசெய்ய அனுப்பிவைக்கின்றார். இறைவாக்கினரை விட மேலானவர் என்றும் மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவர் என்றும் தன் முன்னோடிக்குப் புகழ்மாலைச் சூட்டுகிறார். ஆம் அன்பர்களே யோவாயைப் போல் மெசியாவைக் கண்டுணர்ந்துக் கரடுமுரடான பாதையை வெற்றிகரமாகக் கடந்து அவர்தரும் நிலைவாழ்வை மகிழ்ச்சியோடு நோக்கிப் பயணிக்க அவரின் உடனிருப்பை தேடி, வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எசாயா நூலிருந்த எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம் அடிமைத்தனத்தலிருந்து விடுபட்டுத் திரும்பும் இஸ்ரயேலரின் மனநிலையைப் பிரதிப்பலிக்கின்றது. யாவே கடவுள் பாழ்நிலங்களைச் சோலையாக மாற்றுகிறார். நலிவுற்றோரைப் புதுபலன் பெற்றவைத்துப் பயணிக்க வைக்கிறார். மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் முகம் மலர்ந்திருக்கும். மெசியாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் எசாயாவின் இவ்வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பதிலுரை: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7,8,9,-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.  பதிலுரை

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பதிலுரை 

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! 
பதிலுரை

இரண்டாம் வாசக முன்னுரை

பயிர்செய்வோர் எப்படிப் பொறுமைக் காத்துக் காலம் கனியும் வரை காத்திருந்து தன் உழைப்பின் பயனைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதைபோல் நாம் ஆண்டவரின் வருகைக்கு நம் உள்ளங்களை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரைக் கூறும் திருத்தூதர் யாக்கோபு, ”நடுவர்கள் வந்து விட்டார்கள். எனவே நிலைவாழ்வைக் காத்துக்கொள்ள நம்பிக்கையோடு பயணியுங்கள்” என்று விடுக்கும் மகிழ்சிசியின் அழைப்பைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை அகமகிழ்வின் ஞாயிறாகக் கொண்டாடுகிற திருஅவையோடு இணைந்து, திருத்தந்தை லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். வரவிருப்பவர் தாம் தான் என்பதை, தமது செயல்கள்மூலம் கண்டுணரலாமென, நற்செய்தியில் எடுத்துரைக்கும் இயேசுவைப் பின்பற்றி, திருஅவையானது தனது சான்று பகரும் வாழ்வால், இயேசுவின் வருகையைப் பறைசாற்றிட, உமது அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால வளையத்தின் மூன்றாம் மெழுகுதிரியை ‘மகிழ்ச்சியின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், “ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் துன்பமும் துயரமும் பறந்தோடும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு இந்தப் பூவுலகில் மெய்ப்படவேண்டுமென்றும், அமைதி, நீதி, சமத்துவம் செழிக்கும் பூமியாக இந்த வையகம் விளங்கிட உலகின் தலைவர்களும், எம்நாட்டின் தலைவர்களும், உலக மக்கள் யாவருமே உழைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பயிரிடுபவரை முன்மாதிரியாய் நிறுத்தி யாக்கோபு சுட்டிக்காட்டுகிற, துன்பத்தைத் தாங்குதல், பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகிய நற்குணங்களில் நாங்கள் வளர வரம் வேண்டும் அதே வேளையில், சமீபத்திய புயல் மற்றும் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வில், அரசு தரும் இழப்பீடுகளைத் தாண்டி, நீர் செயல்படவேண்டுமென்றும், அவர்கள் குறையின்றி வாழ வழிபிறக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்கிற முதல் வாசக அறைகூவலுக்கு செவிசாய்த்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு உற்சாகம் தந்து, இயலாதவர்களுக்கு உதவுபவர்களாகத் திகழ்ந்து, கிறிஸ்துவின் வருகைக்கு உண்மையிலேயே தயாரிக்கும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. ‘மனிதராய்ப் பிறந்தவர்களுள் இவரைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை’ என இயேசுவாலேயே சுட்டிக்காட்டப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாலைவனக் குரலைக் கேட்டு, ஆண்டவரின் பாதையை ஆயத்தம் செய்யும் மனிதர்களாய் நாங்கள் இருந்து, விண்ணகத்தில் மிகப்பெரியோராய் இடம்பெறுகிற அருள் பெற்றிட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, December 3, 2025

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு ஆண்டு-1

regram @j.madoff Matthew 3:1-12 1 In those days came John … | Flickr

இன்றைய நற்செய்தி வாசகங்கள் : 

எசாயா 11:1-10
உரோமையர் 15:4-9
மத்தேயு 3:1-12

திருப்பலி முன்னுரை : 

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு.

இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் மனமாற்றத்திற்கான அழைப்பை ஏற்றுத் தெய்வத்தின் திருவடியை நோக்கி வந்துள்ள இறைகுலமே வருக. உங்கள் வரவு உங்களுக்கு நலமும் வளமும் தருவதாக.

கிறிஸ்துவின் வருகை நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம். இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ எசாயா இறைவாக்கினர் வேறுவேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் பவுலடியார்.

மனமாற்றத்தை நம்மிடையே விரும்பும் திருமுழுக்கு யோவான் அந்த மனமாற்றத்திற்கேற்றச் செயல்களால் வாழ்ந்துக்காட்டுங்கள் என்று வலியுறுத்துகின்றார். அமைதியையும் உறவையும் நிலைநாட்ட வந்த இயேசுவின் பிறப்பு நம் முறிந்த உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும். நம் குடும்பங்களில் உறவுமுறிவுகளையும், தவறுகளையும் சீர்படுத்த முன்வருவோம். இவ்வாறு நாம் வாழும் இடங்களில் அமைதியையும் அன்பையும் நிலைநாட்டும்போது அங்கே ஆண்டவர் இயேசு பிறக்கின்றார். இவ்வாறு ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்து பயனுள்ள விதத்தில் கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை :

முதல் வாசக முன்னுரை : 

உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா அழைப்பு விடுக்கின்றார். சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும், பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும்.  எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல் :

பல்லவி: அகமகிழ்வோடு  ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
திருப்பாடல்72: 1-2, 7-8, 12-13,17

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி 

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி 

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை :

எசாயாவின் கனவுகளை நினைவாக்க நீங்கள் கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. எனவே இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் அனைவரும் ஒரு மனத்தினராய்ச் செயல்படுமாறு எடுத்துரைக்கும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல, மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் எதிர்நோக்கு பெற்று, கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப ஒரே மனத்தினராய் இருந்து,  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்ந்திடும் அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால தயாரிப்பு வளையத்தின் இரண்டாம் மெழுகுதிரியை ‘அமைதியின் மெழுகுதிரியாக, சமாதானத்தின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், இன்றைய முதல் வாசகம் சித்தரிக்கக்கூடிய ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும், சிறுத்தைப்புலியும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழுகிற அமைதியின் சூழல் உருவாகவும், போர்களும், வன்முறைச் செயல்களும், தீவீரவாதமும் முற்றிலும் மறைந்து, சமாதானம் தழைக்கும் பூமியாக, இவ்வுலகு மாறவும், அமைதியின் அரசராய்ப் பிறந்த குழந்தையாகிய உம்மால் நாங்கள் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உலகையும், எம்நாட்டையும் ஆளும் தலைவர்கள் அனைவரும், ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு ஆகியவற்றை பெற்றவர்களாய், நேர்மையை அரைக்கச்சையாகவும், உண்மையை இடைக்கச்சையாகவும் அணிந்து, ஏழைகளுக்கு இரங்கி, அனைவருக்கும் நீதி வழங்கி, நடுநிலையோடு ஆட்சி செய்யும் அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கடந்த கால அனுபவங்களால், டிசம்பர் மாதம் என்றதுமே அஞ்சுகிற எங்களுக்கு, இந்த ஆண்டு எந்தவிதமான இயற்கைச் சீற்றமோ அதனால் ஏற்படும் அழிவோ இல்லாமல் காக்குமாறும், நாங்கள் அனைவருமே கிறிஸ்து பிறப்புக்காக எம்மையே மகிழ்ச்சியுடன் தயாரிக்கவும், ஏழைகளோடு பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் மகிழ்ச்சியைத்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற திருமுழுக்கு யோவானின் குரலைக்கேட்டு, மனமாற்றத்தின் பாதையில் பயணிக்கவும், “நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” என்கிற எச்சரிக்கையை உணர்ந்தவர்களாய், நற்செயல் புரியும் நல்லவர்களாக வாழ, வரம்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

                                            www.anbinmadal.org

Tuesday, November 25, 2025

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

  திருவருகைக் காலம் முதல் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

திருப்பலி முன்னுரை:-

திருவழிப்பாட்டின் புதிய ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில் திருவருகைக்கால முதல்ஞாயிறு ஆன இன்று இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்.

கிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடத் தயாராகும் நாம் அவரின் இரண்டாம் வருகைக்கு நம்மை நாமே தயாரிக்க வேண்டியநிலையில் உள்ளோம். இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். இறைமகனின் வருகையை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துகளை வலிறுத்திக் கூறுகின்றன. நற்செய்தி வாசகம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கின்றது.

இன்று ஏற்றப்படும் திருவருகைக் கால முதல் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கின்றது. கிறிஸ்துவின்‌ வருகைக்காகத் தயாரிக்கும் நாம்‌ ஒளியின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ எனத் திருத்தூதர் பவுல்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. இதை உணர்ந்து எதிர்நோக்கு என்கின்ற முதல்‌ திரியை ஏற்றி இயேசுவின்‌ வருகைக்கு ஆயத்தமாவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவரின்‌ ஒளியில்‌ நடக்க அனைத்து மக்களும்‌ ஒன்றுகூடி ஆண்டவரின்‌ கோவில்‌ அமைந்துள்ள மலைக்கு வருவார்கள்‌. இதனை இறைவாக்கினர்‌ எசாயா இறைவனின்‌ மீட்பு அனைவருக்கும்‌ உரியது என்ற வார்த்தைகளால்‌ முன்னறிவிப்பதை முதல்‌ வாசகம்‌ வழியாகக்‌ கேட்போம்‌.

பதிலுரைப்‌ பாடல்‌: திபா 122:1-2, 4-5, 6-7, 8-9

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப்‌ போவோம்‌.

1. ‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

2. ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

3. எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

4. “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி 

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

உரோமை நகரக் கிறிஸ்தவச் சபைக்குப் எழுதிய கடிதத்தில் பவுல் 'இறுதிக்காலம்' பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து மனிதராக நம்மிடையே வந்து 'இறுதிக்காலத்தை' ஏற்கெனவே தொடங்கிவைத்தார். அவருடைய வருகையால் உலகில் கடவுளின் உடனிருப்பு ஒரு சிறப்பான நிலையை எய்தியது. உலகில் ஒரு புதிய விடியல் தோன்றியது. கிறிஸ்துவை அணிந்து கொள்ளவும்‌ பாவத்தைத்‌ தவிர்க்கவும்‌ அழைப்பு விடுக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக்‌ காட்டியருளும்‌; உமது மீட்பையும்‌ எங்களுக்குத்‌ தந்தருளும்‌. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு ஆகிய இன்று, தாயாம் திரு அவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய நமக்காகவும் மன்றாடுவோம். இயேசுவின் முதல் வருகையாகிய வரலாற்றுப் பிறப்பை கொண்டாடுகிற கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்காக மட்டுமல்லாது, அவரது இரண்டாம் வருகைக்காகவும், ‘ஆயத்தமாய் இருங்கள்’ என்கிற நற்செய்தி அறிவுறுத்தலின்படி, விழிப்பாயிருந்து, தகுந்த முறையில் எம்மைத் தயாரிக்க, அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருவருகைக் கால தயாரிப்பு வளையத்தின் முதல் மெழுகுதிரியை ‘எதிர்நோக்கின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்த நாளில், யூபிலி ஆண்டினை கொண்டாடுகிற நாங்கள் அனைவரும், இவ்வுலகிலும், எம்நாட்டிலும், நாங்கள் வாழுகிற சமுதாயத்திலும், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வளவுதான் துன்பங்கள் நிலவினாலும், ‘கடவுள் நம்மோடு’ என்கிற நம்பிக்கையுடன், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. போர்களும், வன்முறைச்செயல்களும், தீவீரவாதமும் தலைதூக்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், “ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்” என்கிற முதல் வாசக இறைவாக்கு நிறைவேற வேண்டுமென்றும், உலகையும், எம்நாட்டையும் ஆளும் தலைவர்களும், மாந்தர் அனைவருமே, அமைதியை நாடுபவர்களாய், ஆண்டவரின் ஒளியில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நவம்பர் மாத இறுதி நாளாகிய இன்று, இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் ‘உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் வந்துவிட்டது, மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது’ என்கிற பவுலடியாரின் நம்பிக்கையைத் தமதாக்கி, நிலைவாழ்வில் பங்குபெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகிய இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை ஏந்தியவர்களாய், பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து, இயேசு கிறிஸ்துவை அணிந்து கொண்ட ஒரு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 17, 2025

கிறிஸ்து அரசர் பெருவிழா

 கிறிஸ்து அரசர் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
மத்தேயு 1:18-24

திருப்பலி முன்னுரை

அன்பானவர்களே ! திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை 'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்ற பெருவிழாவாகத் தாய் திருஅவை கொண்டாடுகிறது.
இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்தான். ஆனால் அவரின் அரசாட்சி இவ்வுலக அரசர்களின் ஆட்சி போன்றதல்ல. இவ்வுலக அரசர்களின் ஆட்சி அதிகாரத்தையும் பணத்தையும் மையமாகக் கொண்டது. கிறிஸ்துவின் அரசாட்சியோ அன்பு, தியாகம், இரக்கம், உண்மை, நீதி, சகோதரத்துவம், அமைதி போன்றவைகளை மையமாகக் கொண்டது.

இஸ்ரயேல் மக்கள் தாவீதைப் போன்று போர் புரிகின்ற ஓர் அரசனை எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். உரோமை ஆட்சியினரின் பிடியிலிருந்து விடுவிக்க ஓர் அரசியல் நெறி சார்ந்த அரசரை எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ இவ்வுலக அரசியல் தலைவர்களைப் போன்று இல்லாமல், அடிமையின் நிலை ஏற்று வந்தார். அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் போதித்தார். தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி துன்பத்தைக் கண்டு தப்பி ஓடவில்லை. மாறாக, சிலுவையை ஏற்றுக் கொண்டு, பகைவரை மன்னித்து, இறைவனின் ஆட்சியை மண்ணுலகில் விதைத்தார். எந்த ஓர் அரசரும் தர முடியாத விடுதலையை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் நமக்குத் தந்தார். 

அவர் விட்டுச் சென்ற இறையாட்சிப் பணியை இன்றைய திரு அவை இலட்சியப் பயணமாக ஏற்றுப் பயணிக்கிறது. இயேசு கிறிஸ்துவே நம் குடும்பங்களின் அரசர், இறையாட்சியே நம் இலட்சியக் கனவு என்ற சிந்தனைகளோடு இப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: 

இஸ்ரயேலின் அரசராகச் சவுலுக்குப் பின் தாவீதை இறைவன் திருப்பொழிவு செய்கிறார். தாவீது அரசர் இஸ்ரயேல் மக்களை ஒன்றிணைத்து, உடன்படிக்கைப் பேழையை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வருகிறார் என்பதைப் பறைசாற்றும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்: திபா 122:1-2, 4-5

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1. “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
2. ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

கிறிஸ்து நம்மைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, உலகம் முழுவதையும் தந்தையாம் கடவுளோடு ஒப்புரவு ஆக்கினார். இவ்வுலகப் படைப்பு அனைத்திற்கும் கிறிஸ்துவே அரசர். அவர்  வழியாகவே, அவருக்காக, அனைத்தும் படைக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் எனும் பெருவிழவை கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலைத் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம். “திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமுமான கிறிஸ்துவே எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு” எங்கள் வாழ்க்கை அமைய   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்” என்கிற பவுலடியாரின் உண்மை கூற்றின்படி, உலகாளும் அதிபர்களும், நாடாளும் தலைவர்களும், இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்றபடி தம் ஆளுமை அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டுமென்றும், அமைதி, சமத்துவம், நல்லிணக்கம், மனிதமாண்பு ஆகியவை பேணப்படுகிற  பூமியாக இந்நாநிலத்தை மாற்றிட, மாந்தர் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திருவழிபாட்டு ஆண்டின் நிறைவு வாரத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும், மரித்த விசுவாசிகளுக்காகச் சிறப்பாக ஜெபிக்கும் இந்த நவம்பர் மாதத்தில், மண்ணுலக வாழ்வின் நிலையாத்தன்மையை உணர்ந்தவர்களாய், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என இறைவேண்டல் செய்வதோடு, நேரிய வழியில் எம்வாழ்க்கையை கட்டியெழுப்பவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இறந்த அடியாளர்கள் அனைவரும், குறிப்பாக எங்கள் குடும்பங்களிலே மரித்தவர்கள், எங்கள் உறவு மற்றும் நட்புச் சூழல்களில் மரித்தவர்கள், நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் மற்றும் மறந்துபோனவர்கள், தங்களுக்காக ஜெபிக்க யாருமே இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் “என்னோடு பேரின்ப வீட்டில் இன்று நீர் இருப்பீர்” என்கிற அருள்வாக்கை கேட்கிற நற்பேறு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      
 
5. விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும், தம்மோடு ஒப்புரவாக்க திருவுளம் கொண்ட, கடவுளின் திருமகனது வருகையை எதிர்நோக்கியிருக்கும் நாங்கள் அனைவரும், சிறப்பாக  இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பகைமை உணர்வுகளை மறந்து, ஒன்றிப்பு, உடனிருப்பு, பங்கேற்பு, ஆகிய பண்புகளை வளர்த்து, ஒப்புரவின் மக்களாகவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, November 10, 2025

பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

பொதுக்காலம்  33ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை 

இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும். என்றும் உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.

எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

முதல்‌ வாசக முன்னுரை: 

இறுதித்‌ தீர்ப்பு நாளைக்‌ குறித்த எச்சரிக்கையையும்‌ அதே வேளையில்‌, எதிர்நோக்கையும்‌ தருவதே இன்றைய முதல்‌ வாசகம்‌. கடவுளுக்கு அஞ்சி நடக்காத ஆணவக்காரர்களுக்கு, எரியும்‌ தீச்சூளையும்‌, அவருக்கு அஞ்சு நடப்பவருக்கோ நலம்‌ தரும்‌ கதிரவன்‌ எழுவானெனக் கூறும்‌ வாசகத்துக்குச்‌ செவிமடுப்போம்‌. 

பதிலுரைப்பாடல் 

திருப்பாடல் 98: 5-6, 7-8, 9
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார். 

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி
 

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி
 

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி 

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

இயேசுவின்‌ இரண்டாம்‌ வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்க நம்மை அழைக்கிறது இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌. கிறிஸ்துவ வாழ்க்கையின்‌ கடமையையும்‌ பொறுப்பையும்‌ உணர்ந்து உழைத்து வாழ அழைக்கும்‌ இந்த வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கட்டப்படும் ஆலயங்கள் அழியலாம். ஆனால் கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாகிய திருஅவை, காலத்தால் அழிவுறாதது. கிறிஸ்துவின் பிரதிநிதியாய் இருந்து அதனை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை 14 ஆம் லியோ, மற்றும் ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், அழிந்துபோகும் உலக இயல்பின்படி வாழாமல், நிலை வாழ்வுக்குரிய இயல்பை அணிந்தவர்களாய் வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் தொடுக்கின்ற போர்களும், பல இடங்களில் ஏற்பட்டு வருகிற நிலநடுக்கங்களும், வெள்ளங்களும், பஞ்சமும், கொள்ளை நோயும், அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும், இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள் மற்றும் துப்புறுத்தல்கள் ஆகியவை குறைந்தொழியா இக்காலத்தில், நீர்தாமே நீதியின் கதிரவனை எழச்செய்து, அமைதியெனும் நலம் தரும் மருந்தினைத் தந்து, தலைவர்களையும், குடிமக்களையும் வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்கிற நற்செய்தி வாழ்த்தொலியால் நம்பிக்கை ஊட்டப்பெறும் நாங்கள், இறந்த அடியார்களை நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில், எங்கள் குடும்பங்கள், அன்பியங்கள் மற்றும் பங்கில் மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும், நாங்கள் நன்றியோடு நினைவுகூர்ந்து ஜெபிக்க கடமைப்பட்டுள்ள அனைத்து நல்லோருக்காகவும் மன்றாடுகிறோம். நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்கிற பவுலடியாரின் போதனைக்கேற்ப, நாங்கள் அனைவரும் கடின உழைப்பாளிகளாகவும், பொறுப்புள்ள மனிதர்களாகவும் விளங்கிட வேண்டுமென்றும், எம் இளையோர்க்கும், வேலையின்றி தவிக்கும் அனைவருக்கும், அவரவர் தகுதிக்கேற்ப நல்ல பணி கிடைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
    
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டோ, தவறான போதனைகளால் ஈர்க்கப்பட்டோ ஏமாந்து போகாமலும், எமக்கெதிராக இழைக்கப்படும் துன்பங்கள், புறக்கணிப்புகள், துரோகங்கள் ஆகியவற்ற்றைக்கண்டு கலங்காமலும், மன உறுதியோடு இருந்து, எங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF